

கிண்டல் சுண்டு
டில்லிக்கு ராஜான்னாலும்
பாட்டி சொல்லைத் தட்டாதே |
அன்புக் குழந்தைகளே, நல்ல பெயர் எடுத்து மேலே
புகழுடன் சிறந்து விளங்க இந்தக் கவிதையைப் படித்து
அதன் படி நடக்க முயலுங்கள்
நல்ல படிப்பு வேண்டும் குழந்தாய்,
கூடவே விளையாட்டும் வேண்டும்;
நல்ல பக்தி வேண்டும் குழந்தாய்,
அத்னுடன் சக்தியும் வேண்டும்.
கடவுளை நம்ப வேண்டும் குழந்தாய்,
கூடவே உழைப்பும் வேண்டும்;
பெற்றோரை வணங்க வேண்டும் குழந்தாய்,
அத்னுடன் பெரியோரை மதிக்கவும் வேண்டும்;
உயர்ந்தாலும் பணிவு வேண்டும் குழந்தாய்,
கூடவே செய்கையில் புனிதம் வேண்டும்;
ஏழைகளுக்கு இரங்க வேண்டும் குழந்தாய்,
அத்துடன் அவர் பசியாற்ற வேண்டும்.
உண்ணும் முன் பிரார்த்தனை வேண்டும் குழந்தாய்,
நாளும் நன்றியுடன் முடிக்க வேண்டும்;
இறை நாமத்தை ஜபிக்க வேண்டும் குழந்தாய்,
அன்பால் வாழ்க்கை தொடர வேண்டும்.
- அன்புடன் அம்மம்மா விசாலம்
இணையப் பட்டி பக்கம்
|