அருமைச் செல்வங்களே,
எவ்வளவு பேர்கள் நாம் முன் மடலில் சொன்னதுபோல் சைய்து பார்த்தீர்கள்? பலனில்லயேல் தொடர்ந்து சைய்து வாருங்கள். நாளடைவில் பலன் உண்டாகும்.
காலையில் இப்படி நல்ல பொழுது மலர, கைகள் தரிசனம் முடிந்து, சிறிது வ்யாயாமம் அதாவது உடற்பயிற்சி (உங்கள் பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொண்டபடி) செய்யவும். பிறகு நித்திய கர்மாக்களை முடித்துக்கொண்டு, ஸ்னானம் செய்து, திருநீரும், குங்குமமும் நெற்றியில் தரித்து, கடவுள் படங்களுக்கு முன் அமர்ந்து இறை வணக்கம் செய்யவும். உங்களுக்குத் தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லலாம். தெரியாதவர்கள், கீழே தந்துள்ள ஸ்லோகங்களைச் சொல்லலாம்: கால்களை மடித்து, இடதுகால் கணுவில் வலதுகால் கணு அமர, கைகளைக் கோர்த்து மடியில் வைத்து, கண்களை மூடிக்கொண்டு, உங்கள் இஷ்ட தெய்வத்தின் உருவை மந்தில் நிலை நிருத்தி, மற்று விஷயங்கள் விசாரமாக வராமல் பகவான் பேரில் சிந்தனையை நாட்டி, கீழ்க்கண்ட ஸ்ளொகங்களைச் சொல்லவும்.
விநாயகன்
விக்னேஸ்வர மஹாபாஹா கோடிஸூர்ய ஸமப்ரபா
நிர்விக்னம் குருமே தேவா ஸர்வ கார்யேஷு ஸர்வதா