ஓ...மானிடனே!
அன்பினாலே பிணைந்திருந்தோம்
இன்பமாய் வாழ்ந்திருந்தோம்
இதயங்கள் பிரித்திடவே
இனவெறியும் இங்குவர
பிரித்தாளும் சூழ்ச்சியினை
யாருனக்குக் கற்பித்தார்?
சாதிகள் இல்லையென்று
சாதிக்க வேண்டியிருக்க
சாதிப் பெயராலே
சண்டைகள் இடுவதென்ன?
மானிடரை உயர்த்திடவே
மாதவங்கள் காத்திருக்க
சாதியினை உயர்த்திடவே
சாவதென்ன மானிடனே?
பிறப்பாலும் இனபேதம் ஏதுமில்லை
உன் உடலாலும் சாதியினை அறிவதில்லை
ரத்தத்தின் நிறமெல்லாம் சிவப்பேதான்
உன் உள்ளத்தில் மட்டுமேனோ
இனக் கறுப்பு...
-oOo-