![]() |
![]() |
புத்தி சிகாமணி பெத்த பிள்ளைஆறு குழந்தைகளைப் பெற்று அவதிப்படும் கணவன் நடிகவேள் எம்.ஆர். ராதா மனைவியுடன் தங்கள் ஆறவது குழந்தையைத் தொட்டிலிலிட்டுப் பாடும் தாலாட்டு. இக்காட்சி இடம்பெற்ற படம் இருவர் உள்ளம். மனைவி: புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை - இது புன்னகை செய்யுது சின்னப் பிள்ளை கணவன்: (லொளலொளலொளாயி) மனைவி: அஞ்சுக்குப் பின்னாலே வந்த பிள்ளை - இது ஆறாவதாய் வந்த செல்லப் பிள்ளை; கணவன்: ஆராரோ அடி ஆராரோ, ஆரோ அசட்டுப் பய பிள்ள ஆராரோ மனைவி: புருசஷன் மனதிலே பூத்திருந்தேன் - கணவன்: ஆமாமா மனைவி: தினம் பொழுதும் இரவுமாய் வாழ்ந்திருந்தேன் கணவன்: ஆமாமா மனைவி: வருஷம் ஒரு பிள்ளை பெற்றெடுத்தேன் - இப்போ வயசு இருபத்தி ஆறாச்சு கணவன்: ஐயய்யோ ஐயையோ ஆராரோ - ஒங்க அம்மா கதைய நீ கேளாயோ? மனைவி: ஆராரோ அடி ஆராரோ, ஆரோ அசட்டுப் பிள்ள ஆராரோ கணவன்: ஆறு பிறந்தது போதுமென்று நான் ஆறு குளமெல்லாம் மூழ்கி வந்தேன் காசி ராமேஸ்வரம் சென்று வந்தேன் - பாழும் காதலினாலே திரும்பி வந்தேன் மனைவி: போகாது ஐயா, போகாது - எங்கு போனாலும் ஆசை போகாது கணவன்: ஆராரோ அடி ஆராரோ - ஆரோ அசட்டுப் பய புள்ள ஆராரோ மனைவி: ஆசைக்குப் பிள்ளை ஆராச்சு, ஆராச்சு - கணவன்: இனி அறுத்துத் தடை செய்ய ஆராய்ச்சி, ஆராய்ச்சி மனைவி: நாம ஆசையுடன் பேசி நாளாச்சு கணவன்: ஆபத்து அங்கே தான் உருவாச்சு மனைவி: ஆசையுடன் பேசி நாளாச்சு கணவன்: ஆபத்து அங்கே தான் உருவாச்சு ஆனாலும் தூங்குது உன் பாட்டு - இனி அடுத்தது நீயுந்தான் தாலாட்டு மனைவி: ஆராரோ அடி ஆராரோ, ஆரோ அசட்டுப் பய புள்ள ஆராரோ திரைப்பாடற் பட்டியல் | ||