![]() |
![]() |
கீதா உபதேசம்இப்பாடல் காட்சியில். கண்ணனாக நடித்தவர் முன்னாள் ஆந்திர முதல்வரும், பழம் பெரும் தெலுங்குத் திரைப்பட முன்னணி நடிகருமான என்.டி. ராமராவ். அர்ஜூனனாக நடித்தவர் பழம்பெரும் தமிழ் குணசித்திர நடிகர் முத்துராமன் மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா! மரணத்தின் தன்மை சொல்வேன்; மானிடர் ஆன்மா மரணமெய்தாது, மறுபடிப் பிறந்திருக்கும்; மேனியைக் கொல்வாய்! மேனியைக் கொல்வாய்! வீரத்தில் அதுவும் ஒன்று; நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி, வெந்து தான் தீரும் ஓர் நாள். என்னை அறிந்தாய், எல்லா உயிரும், எனதென்றும் அறிந்து கொண்டாய்; கண்ணன் மனது கல் மனதென்றோ காண்டீபம் நழுவ விட்டாய் காண்டீபம் நழுவ விட்டாய் மன்னரும் நானே, மக்களும் நானே, மரம் செடி கொடியும் நானே; சொன்னவன் கண்ணன், சொல்பவன் கண்ணன்; துணிந்து நில் தர்மம் வாழ. புண்ணியம் இதுவென்றிவ் வுலகம் சொன்னால், அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே; போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே. கண்ணனே காட்டினான், கண்ணனே சாற்றினான்; கண்ணனே கொலை செய்கின்றான். காண்டீபம் எழுக! நின் கை வன்மை எழுக! இக்களமெலாம் சிவக்க வாழ்க! பரித்ராணாய சாதூனாம், விநாசாய சதுஷ்க்ருதாம்; தர்ம சம்ஸ்தாபனார்த்தாய, சம்பவாமி யுகே யுகே. |