![]() |
![]() |
கௌசிகன்செந்தண்மை பூண்டொழுகலான்
என்பது வள்ளுவர் வாக்கு. பிராமணன் அல்லது அந்தணன் என்பவன் யார்? பிராமணன் ஒருவனுக்கு மகவாய்ப் பிறந்தவன் தான் பிராமணனா? என்ற கேள்விக்கு விஸ்வாமித்திரர் சரித்திரத்தில் விடை கிடைக்கிறது. கௌசிகன் எனும் அரசன் ஒரு முறை தன் சேனை பரிவாரங்களுடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மிகுந்த நேரம் காட்டில் மிருகங்களை வேட்டையாடிக் களைப்பும், பசியும், தாகமும் அடைந்த அரசனும் அவனது சேனையும் உணவும், தண்ணீரும், உணவருந்தி ஓய்வெடுக்க இடமும் தேடினர். அவர்களுக்கு அவ்வனத்தின் அருகிலிருந்த ஒரு ஆஸ்ரமம் தென்பட்டது. அதன் அருகில் சென்று பார்க்க அங்கே வசிஷ்டர் எனும் முனிவர் ஒருவர் இருப்பது தெரிந்தது. அடுத்த பகுதி மற்ற கதைகள் தொடரும்... |